கள்ளுக்கடை
கம்யூனிசம்
தாழ்ந்த சாதிக்கென
தனிக்கோப்பை
இங்கில்லை
வீணாய்ப் போன
வருணம் இங்கில்லை
பிச்சைக்காரனுக்குப்
பரிதாபம் இங்கில்லை
தாசில்தாரானாலும்
தனி மரியாதை
என்றில்லை
வாங்கியப் பின்
கழுத்தை திருகி
ஊற்றியப் பின்
உயரம் பார்த்து
சமத்துவம் காத்து
குடித்தப் பின்
குப்புற விழுந்து
முன்பின் தெரியா
முகம் பார்த்து
சிரித்து அழுது
தொடங்குகிறதுப் பேச்சு
ஓட்டு போட்டது முதல்
ஓசோன் ஓட்டை வரை
ஒன்று மட்டும்
புரிகிறது
நீரின்றி அமையாது
உலகு.
No comments:
Post a Comment