வாழ்வும்
வனிதையும்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
போதே சோறள்ளி வைக்கும்
உணவகனின் மீதுள்ள
எரிச்சல்
பார்த்துக் கொண்டிருக்கும்
போதே போகலாம் என
கூறும் அவள் மீதும்
வருகிறதெனக்கு
முடிக்கும் வரை
பொருத்தா லென்ன
உயிர்வாழ முடியாது
என்னால்
அவளும் அன்னமும்
இல்லாமல்.
No comments:
Post a Comment