Sunday, December 27, 2009

நிலவரம்

மூனு வருசமா
ஒரே பேண்ட்
இப்போதெல்லாம் நானே
முடித்திருத்திக்கிறேன்

ஆகாரமில்லாதவனுக்கு
அண்ணாக்கயிறு இல்லன்னா
என்னக் கொற
மார்கழி முடிஞ்சா
முப்பத்தி ரெண்டு

போட்ட வேலைக்கு
பதில் வர்லனா
பாலிடால் தான்

செழித்துப் போயிருக்கிறது
என் வருமை.




No comments:

Post a Comment